Saturday, July 7, 2007

தொட்டால் பூ மலரும் (யுவன் ஷங்கர் ராஜா)

ஹிந்தியில் ஆரம்பித்து, ஒமர் கய்யாமை இழுத்து, மெலிதான தாளத்துடன் அரபு நாடே தாலாட்டுகிறது. ஹரிசரணின் தேர்வும் கச்சிதம். விட்டால் சூரியனை பாடலில் ரன்ஜீத்தின் உயிரோட்டமுள்ள குரலும், இசைச்சேர்கையும் சுண்டியிழுக்கின்றன. வாடி வம்புப்பெண்ணே ரகுமானை நினைவுபடுத்தினாலும் மனதில் ஒட்டவில்லை. என்னப்பிடிச்சவும் அதே ரகம்தான். விஜய் யெஸுதாஸின் வளையல் கரங்களை பாடலில் இனிமையான வாத்தியச்சேர்க்கை இருப்பினும் நினைவில் நிற்கும் அளவு பெரிதாக ஒன்றும் இல்லை. கடத்துறேன் நான் உன்ன குத்து பாடல்களின் இலக்கணத்தில் தொடங்கினாலும், அதற்குரிய மற்ற உத்திகள் இல்லாமல் சற்று வலுவில்லாமலேயே ஒலிக்கிறது. பி.வாசு, இளையராஜாவிடமிருந்து பெற்ற பாடல்களைப்போல் மகனிடமிருந்து கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது.