Thursday, June 14, 2007

சத்தம் போடாதே (யுவன் ஷங்கர் ராஜா)

ஒரு குழந்தையை பார்த்து பாடப்படும் பாடல் என்ற நோக்கில் பார்க்கையில், அழகு குட்டியில் ஓசையும் அதிகம், ஷங்கர் மஹாதேவனின் குரலின் கடுமையும் அதிகம். யுவனின் ஆரம்ப கால, அனுபவமற்ற பாடல்களை நினைவுபடுத்துகிறது ஓ இந்த காதல். அத்நான் ஸாமியும் தமிழை உணர்ச்சியின்றி கடித்து துப்புகிறார். நல்லவேளையாக வீவா குழுவினரின் தமிழ், பேசுகிறேன் பேசுகிறேன் பாடலில் பரவாயில்லை. பாடலின் இசையும், ராகமும் ரசிக்கதக்க வகையில் மயக்குகின்றன. சாதாரணமாக அனுஷ்காவிற்க்கு ஒதுக்கப்படும் எந்த குதிரையில் பாடலை ஷ்ரேயா கோஷால் ஒரு கை பார்த்து, பிரமாதப்படுத்துகிறார். யுவனின் பின்னணி இசையும், உலக இசையை குழைத்து நா.முத்துகுமாரின் வரிகளோடு நன்றாகவே இணைகிறது இந்தப்பாடலில். சுதா ரகுநாதன், தனது வழக்கமான திரைப்பாடல்களிலிருந்து மிகவும் விலகிய ஒரு விதத்தில் பாடி காதல் பெரியதாவில் கலக்குகிறார். காதலையும் காமத்தையும் ஒன்றோடு ஒன்று மோத வைப்பதில் நா.முத்துகுமாரும், அரேபிய இசையின் மெல்லிய சாயல் கொண்ட இசை சேர்க்கையில் யுவனும் மிளிற்கின்றனர். இயக்குநர் வஸந்த் யுவனின் பாடல்களை பற்றி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்ததாலோ என்னவோ...கூட்டிக்கழித்து பார்த்தால், யுவனும் வஸந்தும் இணைந்த பூவெல்லாம் கேட்டுப்பாரின் பாடல்களை விட சத்தம் போடாதேவின் பாடல்கள் சுமார்தான்.

3 comments:

Howard Roark said...

Ur site is something that I frequent to know about the latest tamil music. Good to see you blogging in tamil now.

(Just curious, how to blog in tamil? Could you explain pls!)

Cheers,
Nagesh

Karthik S said...

The simplest was is to use a Tamil trans-literator available here,
http://www.iit.edu/~laksvij/language/tamil.html

Howard Roark said...

Thanx a ton Karthik.

Cheers,
Nagesh.