Tuesday, June 26, 2007

கிரீடம் (G.V.பிரகாஷ்குமார்)

அக்கம் பக்கம் மற்றும் விழியில் பாடல்களில், இனிமையான பின்னணி இசையும், ரம்மியமான ராகங்கள் இருந்தாலும் இசையமைப்பாளரின் தனித்துவம் இல்லை - ஆரம்பகால ரகுமானை நினைவுபடுத்துகிறது. நாம் எண்பதுகளில் விட்டுத்தொலைத்த சோகமே உருவான 'pathos' பாடலை மீண்டும் கண்ணீரில் கேட்கலாம்...உம்ம்...கேட்க வேண்டாம். தல அஜித் இருந்தால் தலையின் அறிமுக பாடல் இருந்தாக வேண்டுமே...இருக்கிறது...விளையாடு விளையாடு. ஆனால் பாடல் என்னவோ தட்டுத்தடுமாறி எங்கெங்கோ செல்வதால் மனதில் பதிய மறுக்கிறது. கடைசியாக, நா.முத்துகுமார் கனவெல்லாம் பாடலில், தந்தை-மகன் உறையாடலில் பிரமாதப்படுத்துகிறார். இசையும் பக்கபலம். சில நல்ல மெட்டுக்கள் இருந்தாலும் G.V.பிரகாஷ்குமாரின் முந்தைய இரு படங்களின் தனித்துவம் ஏனோ இங்கே இல்லை - ஒரு சராசரி புதிய தலைமுறை தமிழ் இசையமைப்பாளர்தான் தென்படுகிறார்.

No comments: